×

வரவிருக்கும் 4 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை

லடாக்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். லடாக்கில் 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கார்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இளைஞர்கள் பலரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கவலை தெரிவித்தனர்.

பின்னர் பேசிய ராகுல் காந்தி வேலையில்லா திண்டாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்பும் போது தனது பேச்சை ஒளிபரப்புவது இல்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர்; 4 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே லடாக் பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பும் ராகுல் காந்தி மீண்டும் துக்ளக் லேனில் அரசு பங்களாவில் குடியேற போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post வரவிருக்கும் 4 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Congresswoman ,M. GP ,Raqul Gandhi ,Madhya Pradesh ,Rajasthan ,Chhattisgarh ,Telangana ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...